Sunday, September 30, 2007

நினைவின் அர்த்தங்கள்


சிறு வயது முதலே எனக்குள் ஒரு விருப்பம் உண்டு.வாழ்க்கையை முழுவதுமாய் உணர்ந்து வாழவேண்டும் என்பதே அது. இதை எப்படியோ வாழ்க்கை அறிந்திருக்கிறது .தன்னை உணர நினைப்பதாலேயே என்னை மிகவும் விரும்பி என் ஆசைக்கு துணையாய் வாழ்தலை கற்று தர முனைந்தது. ஆனால் நானோ வாழ்க்கை தன்னை உணர்த்தும் ஒவ்வொரு பொழுதிலும் சிறு கோபம் கொண்டு சிறு தொல்லைகளால் அதன் உணர்வுகளை நிராகரித்திருக்கிறேன். தான், அன்பை எதிர்நோக்கும் ஒருவரிடமிருந்து வரும் நிராகரித்தலின் வலி தாளாமல் ஒரு முடிவிற்கு வந்ததாய் என் அன்புக்கினியவர்களை தேடி அவர்கள் வழியாக தன்னை உணர்த்த முடிவுசெய்தது.ஆனால் நானோ அதன் நாடகத்தை அறிந்தவனாய் எப்பொழுதும்போல் அதன் மேல் கோபம் கொண்டேன். தன் முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் இன்னும் அதிகமான அன்போடும் அக்கறையோடும் என்னை தேடி ஏதோ ஒரு பாசத்திற்குறிய முகத்தின் வழியே வந்து கொண்டுதான் இருக்கிறது,தன் முயற்சியின் உள்நோக்கத்தை, உள்ளன்பை உணராமல் கோபம் கொள்ளும் என்னை தொடர்ந்தபடி.பாவம் அதன் நிலைமை பரிதாபத்திற்குறியதாகவே உணர்கிறேன்.


ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்..என்னைப்போல் தான் (என்) வாழ்க்கையும்..:-)

2 comments:

It's me....NAAN.....Nanae thaan said...

touching lines but couldnt understand completely but could feel ur pain

LakshmanaRaja said...

மிக நண்றி உணர்தலுக்கும். புரிய முயற்சித்தமைக்கும்.