Friday, September 21, 2007

இனியேனும் நிறுத்துகின்றேன் உனக்கென கவிதை எழுதுவதையாவது!


கவிதைகள் உணர்த்தியதா
தெரியாது!
மீண்டும் மீண்டும்
வலிகள் உணர்த்துகின்றன
உன் மீதான
என் அன்பின் ஆழத்தை!

நீ விட்டு சென்ற
முட்களை நினைவுச்சின்னமென
சேகரிக்கின்றேன்
கவனிக்கப்படாமல்
என்னை போல் வீழ்கிறது
விரல் நுனி ரத்தம்
அதே பாதையில்......

உன் கவிதைக்கு
மற்றுமொரு
'அசைச்சொல்'லென
அர்த்தமற்று
தொக்கிநிற்க மறுக்கிறது
என் சுயம்...

கண்ணீரோடும் சப்தத்தோடும்
காலத்தின்(காலமின்மையின்!) கைகளில்
இழுத்து செல்லப்படும்
ஓர் குழந்தையின்
கைவிரல் நீட்டிய
எதிர் திசையில்
சிரிக்கிறது
அழகான பொம்மை ஒன்று
அமைதியாய்..

No comments: