Saturday, September 22, 2007

நானும் அவனும்


நன்கறிவேன் நான்
அவனை!

வல்லினம் கூட மெல்லினமாக தன்னை
உணரும் அவன் வார்த்தைகளில்!

தன் வீட்டிலும் -
நன்பர்கள் வீட்டிலும்
அவன் தான் நல்லப்பிள்ளை.

எப்பொழுதும் மழையீரம்
நிரம்பிய அவன் முகத்தில்
முகமூடிகள் பிரித்தறிவது கடினம்!

நிரம்பிய அனுபவசாலி!
வலியுடன் வரும் எல்லோரையும்
சில நொடிகளில்
மகிழச்செய்பவன்!

பிறர் சுயம் மதிப்பதை
தன் சுயம் என வாழ்பவன்

அவனுக்கு கவிதை எழுத
தெரியாதென என்னை கர்வம் கொள்ள
செய்பவன்!

ஓர் உடலில்
இருதுருவங்களென நாம்
வாழ்கிறோம் என்று நான் கூறுகையில்
மிக அழகாக புன்னகைப்பவன்!

ஓர் சுயத்தின்
நிரூபித்தலுக்கு இலக்காகி
சற்றுமுன் கொலையின்
குரூரத்தோடு முகம் அறைந்து
வீழ்ந்த உணர்வுகள் நிரம்பிய
என் கவிதைகளில்
வழியும் குருதியின் வாசத்தால்
வெறிகொண்ட வன்மதோடு
எழுத முனைந்த என் துவ்வலை
தடுத்தாண்டு
காற்றுக்கசையும் புல்வெளியின்
மகத்துவத்தை பற்றி கவிதை எழுத அழைக்கின்றான்..

தன்னை மதிப்பவரை
மதிக்க வேண்டும் என்று
ஓர் விண்ணப்பத்தை
வைத்து செல்கிறது
காலம்!

இலக்குமண ராசா

5 comments:

காயத்ரி சித்தார்த் said...

நல்லாருக்குங்க லக்ஷ்மண்! :)

LakshmanaRaja said...

நன்றி காயத்திரி அவர்களே.

pRaBhU said...

So who is this friend? காலம்?

very eager to know it.

pRaBhU said...

கவிதை is a thought, so i agree that it is not necessary to portray a few specific things. But this thought about a friend, is this a கவிதை?

im kind of confused :)

LakshmanaRaja said...

its me.myself. Split personality!