Thursday, September 13, 2007

மௌனம் சார்ந்த நிலங்களில்




என் கவிதைக்குள்
வர மறுக்கின்றன்
உன் மௌனத்தோடு
வைத்திழந்த
என் வார்த்தைகள்
ஒரு தோல்வியின் தாளாமையோடு

அன்றைய மழையை
உன் வரவை
இன்றைய வெயிலை
நிரப்பிபோகிறது காலம்
ஒரு பாதசுவடுக்குள்!
அந்த சுவடின் ஓரத்தில்
நிலையாய்
நிற்கும் ஒரு பார்வையில்
கொடிய வெயில் ஒன்று
மழையாய் உருகும்
அபத்தம் நிகழ்கிறது!


முகம் மூடி சுயம்
மறைக்கும் உன் விரல்களினூடே
வழியும் கண்ணீர் துளிகளை
கவிதை என அடிக்கோடிடும்
உன் முயற்சிகளில்
சிறு சாட்டைக்கு பயந்து
கோயில் வாசல் யானையொத்து
தன் சுயம் மறந்து
எல்லைக்குள்
நிற்கிறது
மொனமாய் ஓர் அன்பு..

அன்பை எதிர் நோக்கும்
கேள்விகளுக்கு
தேர்வின் அக்கறையோடு நீ
தரும் வெறுமை நிரம்பிய பதில்கள்
எனக்குள் நினைவுபடுத்துகிறது
சில கவிதைகளையும்
இயலாமைகளையும்...

இதை கவிதையென்றும்
நான் கவிஞன் என்றும் நீ
கூறி செல்லலாம்..
காலம் எதைதான்
நிகழ்த்தவில்லை..

2 comments:

இராம்/Raam said...

//இதை கவிதையென்றும்
நான் கவிஞன் என்றும் நீ
கூறி செல்லலாம்..
காலம் எதைதான்
நிகழ்த்தவில்லை..//

:)))


அழகான கவிதை.....

LakshmanaRaja said...

நன்றி நண்பரே!