Tuesday, October 30, 2007

என் கவிதைகள்


சற்று முன் பிறந்த
உலக வெளிச்ச சப்தமறியாத
சிறு குழந்தையின் அழுகுரல் கூறும்
உண்மையான அர்த்தத்தை
அன்புடை நண்பர்களும்
வழிபோக்கர்களும் புரிந்துகொள்வதேயில்லை!

தன்னை
உணர்வதற்கென்றே உயிர் வாழும்
அன்னை அருகிருக்கும் வரை
அது தன் அழுகையை தொடரலாம்
எவ்வித கவலையுமின்றி!

No comments: