Saturday, August 11, 2007

ஓய்வு நேரங்களில்..


உயிரறும் வலியோடு
விக்கித்த‌வித்த‌ அன்றைய பொழுதில்
உணர்வுகள் முழுதும் உன் பெய‌ர்!


த‌ண்ணீர் குவளை‌யோடு
அவச‌ர‌மாக‌ வ‌ந்தாய்
உன் ஒய்வு நேர‌த்தில்.
எல்லாம் முடிந்தும்
மீண்டும் விக்கினேன்
உன் அன்பிற்காக‌!

ம‌ன்றாடினேன் ஆண்ட‌வ‌னிடம்
இனியேனும்
என் தாக‌ங்க‌ள்
உன் ஓய்வு நேர‌த்தில்
வர‌வேண்டும் என்று.

த‌ன் இருப்பை உண‌ர்த்திய‌ப‌டி
உள் ந‌க‌ர்ந்த‌து
முள் ஒத்த ஓர் உருவ‌ம்!

கண்டிப்பாக தெரியும்

இந்த வரி(லி)க‌ளை
நீ ப‌டிப்பாய் என்று
கண்கள் பனித்தபடி
உன் ம‌ற்றுமொறு
ஓய்வு நேர‌த்தில்!

2 comments:

மஞ்சூர் ராசா said...

முணக‌ள் முழுதும் உன் பெய‌ர்!

(முணகள் என்றால் என்ன??)

மற்றுமொரு = மற்றுமொறு அல்ல

சில வார்த்தைகளின் அர்த்தம் மாறினால் கவிதையின் சாரமே மாறிபோய்விடும் நண்பரே.

LakshmanaRaja said...

//சில வார்த்தைகளின் அர்த்தம் மாறினால் கவிதையின் சாரமே மாறிபோய்விடும் நண்பரே. //

உண்மை நண்பரே. தங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்
மிக்க நன்றி.