Monday, January 21, 2008

தாலாட்டு

உன் புன்னகையொத்து
ஒர் தாலாட்டை
மென்மையாய்
உதிர்க்கின்றாய்

வார்த்தைகள் தெளிவில்லை
அர்த்தமும் விளங்கவில்லை தான்

என்றாலும்
கண்டிப்பாக தெரியும்
அது ஒரு தாலாட்டு என்று

அசையத்தொடங்கியது
ஓர் ஆதியின்
தூளி

உறக்கம் கலையாத
ஓர் குழந்தையின்
புன்னகையும் சாட்சியாய்

நேற்று
இன்று
நாளை
எல்லாம் கனமிழக்க
துயில் கொள்ளத்
துவங்குகிறேன்
அமைதியாய்
ஓர் கருவறையின்
கதகதப்போடு

No comments: