Showing posts with label சுய விளக்கம். Show all posts
Showing posts with label சுய விளக்கம். Show all posts

Tuesday, November 13, 2007

புரிதலும் புரிதல் நிமித்தமும்



என் கவிதைகளை நான் அரங்கேற்றுவது குழுமங்களில் தான். எந்த குறை நிறை பற்றி விமர்சிப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

கவிதையின் மிக முக்கியமான தேவையாகிய
எழுத்து பிழையற்று மிக சரியாக எழுத முத்தமிழ் மற்றும் பிரவாகம் எனக்கு மிகுந்த உதவி செய்துள்ளது,முக்கியமாக மஞ்சூர் அண்ணா..


ஆனால் பொருட்பிழை பற்றிய விமர்சனங்கள் தான் என்னை பாதிப்பது,,


என்ன கருத்துக்காக எழுதபட்டதோ அதுவே தவறாக உணரபடுவது போல் மிக மோசமாக நான் கவிதை எழுதவில்லை என்பது என் அளவில் உண்மை..

என் கவிதைகள் ரசிப்பு தன்மையை விட உணர்வு தன்மை அதிகம் உள்ளவை..(பெரும்பாலும் வலி மிகுந்தவை)

படித்த முதல் தடவை இரண்டொரு நொடிகளில் புரியும் அளவு எழுதுவது ஒரு வகை..
எங்களுடையது மற்றொருவகை. இவை அர்த்தம் புரியும் வரை கடினமாக இருக்கும்.புரிந்து கொண்டால் சொல்லப்படும் கருத்து ரசிக்கப்படுவதை விட அனைவராலும் உணரப்படும்.

இதற்கு 1. பொறுமை தேவை 2. அனுபவம் தேவை 2. இது போன்ற எழுத்துக்களை வாசித்தல்..தமிழ்நதி,தமிழச்சி,மானுஷ்யபுத்திரன்..(நம் குழுமத்தில் கென்)...இன்னும் பலர்...இவர்களோடு என்னை ஒப்பிடவில்லை.. அவர்களின் கவிதைகளை போன்றது தான் என்னுடையதும்,,

உயிர்மையில் வரும் கவிதைகள் படிப்பவர்களுக்கு என் கவிதைகள் மிக சாதாரனமாக புரியும்.

சிறு வயதிலிருந்து இன்று வரை ரசிப்பு தன்மை யிலிருந்து விலகி உணர்வு தன்மைக்கு வந்துவிட்டேன்...இது என்னை பொறுத்தவரை முன்னேற்றமே...

எல்லோருக்கும் புரியும் கவிதையை தான் எழுதவேண்டும் என்றால் என்னால் இயலாது..

கலைபடங்களும் வியபாரரீதியான படங்களும் வெவ்வேறு வகை.இரண்டும் தவறல்ல..ஆனால் இரண்டும் படங்கள் என்பதை ஏற்க வேண்டும்.

மேல் சொன்ன வார்தைகள் எதுவும் தவறென்று கருதினால் சொல்லலாம்..அனுபவமின்மையால் இப்படி புரியாமல் கவிதை எழுதுவதாகவும் சொல்லலாம். .ஆனால் நான் ஏற்றுக்கொள்வது நேற்றைய என் அனுபவங்களையும் நாளைய என் அனுபவங்களையும் பொறுத்ததே!

நன்றி