Sunday, November 18, 2007

பிழைப்பு

உடைந்த முகம்
ஒன்று உடையாத கண்ணாடியில்!
ஒட்டி வைக்க முயற்சிக்கும்
விர‌ல்களுக்கு தட்டு படாமல் விரிசல்கள்!

உணரவில்லை கண்கள்
இரத்தம் சிந்திய கைகளை!
மிச்சமாய் வலி மட்டும்
இதயத்தில்!!

எவனோ சொன்னான்
அது நானாம்!
என்ன முட்டாள்தனம்!
ஏகத்தாளமாய் சிரித்தேன்!
உடன் சிரித்தது
அந்த கண்ணாடி பிம்பம்!!

No comments: